அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 70.99 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

 நாட்டின் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்தத் தடுப்பூசித் திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசித் திட்டம், மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் உள்ள 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி, 11 சுகாதாரப் பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு என 11 பிரிவுகளில் நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்றைய நாளில் பெயரிடப்பட்டவர்களில் 52 வீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

 இரண்டாம் நாளான நேற்று ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று 19 ஆயிரத்து 569 பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டபோதும் 13 ஆயிரத்து 892 பேரே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். இந்த எண்ணிக்கை 70.99 வீதமாகும். இதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் நாளைய தினமும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது

.
யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்! Reviewed by Author on June 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.