அண்மைய செய்திகள்

recent
-

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி ஒருவர் பலி

இன்று காலை பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்காது குறித்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. 

 குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் பொல்கஹவலை பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய கோசல என்பவர் உயயிரிழந்துள்ளார். மேலும் அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி ஒருவர் பலி Reviewed by Author on July 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.