அண்மைய செய்திகள்

recent
-

இன்று பயங்கரவாத தடை சட்டத்திற்கு 42,வயது.

🩸1979, யூலை,19, ம் திகதி இரவு 10.45, மணிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது! 

🩸அன்று பி.ப.1, மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், நீதி அமைச்சராகவும் இருந்த கே.டவிலியூ.தேவநாயகம் அவர்கள் இந்த சட்டத்தை சமர்பித்தார்.

 🩸தற்காலிகசட்டமாகவே இது சமர்பிக்கப்பட்டாலும் பின்னர் இது தொடர்ந்து 1982.ல் நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டது! 

🩸ஏறக்குறைய பத்து மணித்தியாலம் மட்டுமே விவாதம் இடம்பெற்று அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது! 

🩸எதிர்கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணி 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக பேசியபோதும் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர்.! 

🩸42.வருடங்களாக இந்த பயங்கர வாத தடைச்சட்டத்தால் மிகவும் வதைபட்டு பாதிப்படைந்தவர்கள் இலங்கையில் தமிழர்களே..! 

🩸தற்போதும் இச்சட்டத்தால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இன்னும் கைதுசெய்யப்படுகின்றனர்.! 

🩸இந்த சட்டத்தை முற்றாக நீக்குமாறு சர்வதேச நாடுகள் தொடராக அழுத்தங்களை தெரிவித்தவண்ணம் உள்ளன! 

🩸தமிழரை கொண்டு பாராளுமன்றத்தில் சமர்பித்து தமிழரகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டமாக இதை அப்போது பலராலும் பேசப்பட்டது! 

🩸இந்த சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா இராணுவ தளபதியாக அப்போது இருந்த பிரிகேடியர் ஐ.விஜயதுங்காவை 1979, யூலை, 20ம் திகதி அழைத்து எதிர்வரும் 1979,டிசம்பர்,31, ம் திகதிக்கிடையில் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை வேரொடு களையுமாறு உத்தரவிட்டார் 

🩸1977,ல் வடகிழக்கில் உள்ள 18, தமிழ்தொகுதிகளில் தமிழர் விடுதலை கூட்டணி வெற்றியீட்டி வட்டுக்கோட்டை தீரமானத்திற்கு அங்கீகாரம் வழங்கிய இந்த தேர்தலில் தான் முதன் முதலாக இலங்கை சரித்திரத்தில் தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவரானார்.! 

🩸வடக்கு கிழக்கு மாகாணத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்காத ஒரேயொரு தேரதல் தொகுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியாகும் இந்த தொகுதியில் ஐக்கியதேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட கே.டவிலுயூ.தேவநாயகம் அவர்கள் வெற்றி பெற்றார். 

🩸தமிழர் விடுதலை கூட்டணியை தோற்கடித்தமைக்காக அவருக்கு ஜே.ஆர்.ஜெயவரதனா நீதி அமைச்சர் பதவியை பரிசாக வழங்கினார்! 

🩸அதே பதவியை வைத்து 1979, யூலை.19,ல் பயங்கரவாத சட்டத்தை அவரைக்கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஜே.ஆர்.ஜெயவர்தனா சரியாக ஏழு மாதத்தால் கே.டவிலியூ.தேவநாயகம் அவர்களிடம் இருந்த நீதி அமைச்சர் பதவியை பறித்தெடுத்து உள்ளூராட்சி அமைச்சராக 1980, பெப்ரவரி, 14, ம் திகதி வழங்கினார். 

🩸பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே தமிழன்ஒருனை நீதி அமைச்சராக ஐக்கிய தேசிய கட்சி அரசு நியமித்தது என்ற வரலாற்றையும் தற்போதுள்ள இளைஞர்கள் அறிவது நல்லது.! 

பா.அரியநேத்திரன்.




இன்று பயங்கரவாத தடை சட்டத்திற்கு 42,வயது. Reviewed by Author on July 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.