மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 5 பேர் உயிரிழப்பு
கொரோனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 5 பேர் கடந்;த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தேர் தொகை 134 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 103 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும்,
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கும்,
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும் மற்றும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும்.
மட்டு போதனா வைத்தியசாiலையில் 6 பேர் உட்பட 266 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது
இதேவேளை தொடர்ந்து 1679 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளார் அதிகரித்துவருகின்ற நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் முடிந்தளவு வீடுகளில் தங்கிருந்து சுகாதார முறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 5 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
August 09, 2021
Rating:
Reviewed by Author
on
August 09, 2021
Rating:


No comments:
Post a Comment