அண்மைய செய்திகள்

recent
-

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிக்க முடியும் – அவசர எச்சரிக்கை!

பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. 

 பேருந்துகளில் இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் இன்று முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிக்க முடியும் – அவசர எச்சரிக்கை! Reviewed by Author on August 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.