அடுத்த இரு வாரங்களில் மரணங்கள் அதிகரிக்கலாம்: இராணுவத் தளபதி
கொவிட் நோயாளர்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மிக வேகமாக பரவக்கூடிய பிறழ்வு நாட்டிலுள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உலக நாடுகள் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவ தற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை கொவிட் ஒழிப்பு தேசிய செயலணி என்ற வகையில் முன்னெடுத் துள்ளோம்.
எனினும், பொதுமக்கள் சுய ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற முடியும் என சவேந்திர சில்வா மேலும் கூறினார்.
இதனிடையே, முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான அட்டையை தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
அனைவரையும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லையென்றால் சிற்சில இடங்களுக்குச் செல்வதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம்.
நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், சில இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத் தில் உருவாகக் கூடும். செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்துக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
அடுத்த இரு வாரங்களில் மரணங்கள் அதிகரிக்கலாம்: இராணுவத் தளபதி
Reviewed by Author
on
August 09, 2021
Rating:
Reviewed by Author
on
August 09, 2021
Rating:


No comments:
Post a Comment