அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவால் சீனாவைவிட இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவு – மேலும் 82 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 727ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்று தோன்றிய இடமாகக் கூறப்படும் சீனாவில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 4 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர். 

 இந்த நிலையில், சீனாவைவிடவும் இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 18 ஆயிரத்து 775ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 524 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 29 ஆயிரத்து 524 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் சீனாவைவிட இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவு – மேலும் 82 பேர் மரணம்! Reviewed by Author on August 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.