அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மெசிடோ” நிறுவனத்தினால் உலர் உணவு பொருட்கள் கையளிப்பு

நாடளாவிய ரீதியில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம்,செளத்பார்,ஜிம்றோன்நகர், பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் தேவையுடைய குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இன்று செவ்வாய்கிழமை(10) ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் சாந்திபுரம்,ஜிம்றோன் நகர்,செளத்பார் பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

 குறித்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு 2500 ரூபா பெறுமதியான அரிசி,சீனி,மா,பருப்பு,தேயிலை உட்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப்பணிப்பாலர் திரு.K.திலீபன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரொகான், சாந்திபுரம் கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் இணைந்து வழங்கி வைத்தனர் குறித்த நிறுவனத்தினால் கடந்த வாரம் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த சேவா கிராமத்தை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு 75000 ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்படமை குறிப்பிடதக்கது






மன்னாரில் மெசிடோ” நிறுவனத்தினால் உலர் உணவு பொருட்கள் கையளிப்பு Reviewed by Author on August 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.