காபுல் விமானநிலையத்தில் முள்வேலிக்கு மேலாக அமெரிக்க இராணுவவீரரிடம் வழங்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக உள்ளது – அதிகாரி தகவல்
பெற்றோரினால் அமெரிக்க மரைன் படைப்பிரிவினரிடம் வழங்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக உள்ளது என மரைன் படைப்பிரிவின் பேச்சாளர் ஜிம் ஸ்டென்ஜர் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் குழந்தை தந்தையுடன் விமானநிலையத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மரைன் படைப்பிரிவின் தொழில்சார் தன்மைக்கு சிறந்த உதாரணம் அவர்கள் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது மிகவும் துரிதமாக பல முடிவுகளை எடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் காணப்பட்ட குழந்தை அந்த பகுதியில் காணப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது மருத்துவ பணியாளர்கள் அந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
காபுல் விமானநிலையத்தில் முள்வேலிக்கு மேலாக அமெரிக்க இராணுவவீரரிடம் வழங்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக உள்ளது – அதிகாரி தகவல்
Reviewed by Author
on
August 21, 2021
Rating:

No comments:
Post a Comment