நாடு முடக்கப்படாமைக்கான காரணத்தை புதிய சுகாதார அமைச்சர் தெளிவுப்படுத்தினார்..!
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாழ்வதற்கு முயற்சிக்கின்றமை ஆகியனவே, கொவிட் வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கான ஒரே வழிமுறை என புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டை முடக்குவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் வலுவான நாடுகள் கூட, கொவிட் பரவல் ஆரம்பமான காலப் பகுதியில் நாட்டை மூடிய போதிலும், பின்னர் நாட்டை திறந்து கொவிட் தொற்றை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கப்படாமைக்கான காரணத்தை புதிய சுகாதார அமைச்சர் தெளிவுப்படுத்தினார்..!
Reviewed by Author
on
August 17, 2021
Rating:

No comments:
Post a Comment