அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்யும் மத குருக்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற போதிலும் மக்கள் மற்றும் சில மத தலைவர்கள் தொடர்சியாக சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்து வருகின்றனர் குறிப்பாக ஆலயங்களில் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதிகளவான மக்களை அழைப்பது முககவசம் அணியாது மதவழிபாடுகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன

 தொடர்சியாக சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுகின்ற போதும் குற்ற உணர்வு இன்றி அவ்வாறான நிகழ்வுகளை சமூக வலைதலங்களில் நேரலை செய்வதும் பதிவுகள் இடுவதும் அதிகரித்துள்ளது அதே நேரம் சில கிராம பகுதிகளில் தொடர்சியாக கொரோனா நெருக்கடி நிலைமையிலும் சுகாதார நடைமுறைகளை மீறி கோவில் திருவிழாக்கள் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

 எனவே பொது மக்களோ மத தலைவர்களோ சுகாதார நடைமுறைகளை மீறும் பட்சத்தில் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கோ,சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது அதே நேரம் பொலிஸாருக்கோ சுகாதார துறையினருக்கோ தெரியாமல் இரகசியமாக ஒன்று கூடுவதையோ விழாக்கள் கொண்டாடுவதையோ தவிர்க்குமாறு சுகாதார துறையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது




மன்னாரில் சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்யும் மத குருக்கள் Reviewed by Author on August 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.