அன்டிஜென் சோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டவர் கொரோனாவால் பலி
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார்.
இருப்பினும், அப்பகுதியின் பொதுச் சுகாதார பரிசோதகர் அவருக்கு தனி அறையைப் பயன்படுத்தவும் ஏனையவர்களுடன் தொடர்பில் இல்லாமல் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி யுள்ளார்.
குறித்த நபரின் உடல்நிலை இரவில் மோசமடைந்த துடன், கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையின் போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலே மரணத்திற்கான காரணம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.
அன்டிஜென் சோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டவர் கொரோனாவால் பலி
Reviewed by Author
on
August 11, 2021
Rating:
Reviewed by Author
on
August 11, 2021
Rating:


No comments:
Post a Comment