அண்மைய செய்திகள்

recent
-

பாசையூரில் வீடொன்றினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட எழுவர் அரை மணி நேரத்தில் கைது

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் இடம்பெற்று அரை மணிநேரத்தில் இந்தக் கைது நடவ டிக்கை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்த னர். நேற்று பிற்பகல் 2.30 மணியள வில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடு பட்டதுடன் வீட்டிலிருந்தவர் களையும் அச்சுறுத்திவிட்டுத் தப்பித்தது. 

சம்பவம் தொடர்பில் கிடைத்த தவலின் அடிப்படை யில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத் தனர். இதனடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு மரக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டன. பாசையூர், மணியந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 வயதுக் கும் 27 வயதுக்கும் உட்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்ட னர். சந்தேக நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப் பட்டனர்.

பாசையூரில் வீடொன்றினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட எழுவர் அரை மணி நேரத்தில் கைது Reviewed by Author on September 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.