அண்மைய செய்திகள்

recent
-

நாங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்- நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

இப்போது எங்களை இங்கு கொண்டு வந்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் தனியாகத்தான் சுடரேற்ற அந்த பகுதிக்கு சென்றேன் அப்போது அந்த வழியால் வந்த எங்கள் கட்சி சார்ந்தவர்கள் அங்கே நான் நின்று பொலிஸார் என்னுடன் வாக்குவாதப்படுவதை பார்த்த பின்னர் அந்த இடத்திற்கு வந்து என்ன நடக்கின்றது என நியாயம் கேட்க முற்பட்டவேளை அவர்களையும் சேர்த்து கைதுசெய்துகொண்டு வந்து நாங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி தவணையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி ஒருவனாக நான் அந்த இடத்திற்கு சென்றதை கூட தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்- நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் Reviewed by Author on September 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.