அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி நாடு திரும்பியதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் :இராணுவத் தளபதி

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்த பின்னர் நாட்டை மீண்டும் திறப்பது குறித்து சில ஆலோச னைகளை வழங்குவார் என்று இராணுவத் தளபதி சவேந் திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த புத்தாண்டு காலத்தைப் போல அடுத்து வரும் ஏப்ரல் வசந்த காலத்தில் செயற்பட வேண்டாம் என்றும் அவ்வாறு செயற்பட்டால் மீண்டும் ஒரு கொரோனா அலை வருவதை தடுக்க முடியாது என்றும் கூறினார்.

 நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியளிக்கும் வகையில் கட்டுப் பாட்டுக்குள் இருப்பதாகவும் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறையுமென்று எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டைத் திறக்க சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப் பட்டு வருவதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 50 வீதமானோர் மாத்திரம் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் :இராணுவத் தளபதி Reviewed by Author on September 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.