மன்னாரில் சீமெந்து பதுக்கப்பட்ட களஞ்சிய சாலைக்கு சீல் வைப்பு.
கொரோனா நிலையை பயன்படுத்தி மன்னார் நகர பகுதிகளில் குறிப்பாக சாந்திபுரம், தாராபுரம், தலைமன்னார் பிரதான வீதி பகுதிகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வர்த்த நிலையங்கள் மற்றும் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, மற்றும் பொருட்களை பதுக்கியமை உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதே நேரம் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி பெரியகமம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு அருகாமையில் உரிய அனுமதி பத்திரமின்றி சீமெந்து பதுக்கி வைக்கப்பட்ட களஞ்சிய சாலைக்கும் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினர் சீல் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சீமெந்து பதுக்கப்பட்ட களஞ்சிய சாலைக்கு சீல் வைப்பு.
Reviewed by Author
on
September 21, 2021
Rating:
Reviewed by Author
on
September 21, 2021
Rating:











No comments:
Post a Comment