துறைமுகத்தில் உள்ள பால்மா கொள்கலன்களைவிடுவிக்க அமெரிக்க டொலர்கள் இல்லை - பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்
துறைமுகத்தில் உள்ள பால்மா கையிருப்பை விடுவிக்க அபராதம் செலுத்த வேண்டியிருப்பதால், பால்மா இறக்குமதியாளர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என அச்சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இறக்குமதியாளர்கள் 90 நாட்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான விலைப்பட்டியலுக்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்திலிருந்து விலைப்பட்டியல் தீர்க்கப்பட வேண்டும்.
கப்பல் நிறுவனங்கள் பணம் செலுத்தியவுடன் மாத்திரமே கொள்கலன்களை விடுவிக்கும்.
குறித்த கொள்கலன்களை விடுவிக்க தாமதம் ஏற்பட்டால் , மேலதிக தொகையை செலுத்த நேரிடும்.
நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஏற்றுமதி இரத்து செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
துறைமுகத்தில் உள்ள பால்மா கொள்கலன்களைவிடுவிக்க அமெரிக்க டொலர்கள் இல்லை - பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்
Reviewed by Author
on
October 01, 2021
Rating:

No comments:
Post a Comment