அண்மைய செய்திகள்

recent
-

ஒரு லீற்றர் பாலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை!

ஒரு லீற்றர் பாலுக்கு குறைந்தபட்சம் ரூ.120 விலை உயர்வை அகில இலங்கை பால் உற்பத்தியாளர் சம்மேளனம் கேட்டுள்ளதாக பால் பண்ணையாளர்களை பாதுகாக்கும் தேசிய நிலையம் தெரிவித்துள்ளது. பால்மா நிறுவனங்கள் விலையை அதிகரித்த பின்னர், அவர்களுக்கு கிடைக்கும் இலாபம் பால் உற்பத்தியாளர் களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. பால்மா நிறுவனங்கள் அந்த இலாபத்தை அனுபவிக் கின்றன. 

பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி அவர்களுக்கு விளக்கினோம். தற்போதைய சூழ்நிலையில், ஒரு லீற்றர் பால் உற்பத் திச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. கால்நடை மருந்து மற்றும் சிகிச்சை, தீவனம் போன்றவைகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் இப்போது கடந்து விட்டன என்றும் பால் பண்ணை யாளர்களைப் பாதுகாக்கும் தேசிய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 400,000 பால் உற்பத்தியாளர்கள் இச்சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தற்போது ஒரு லீற்றர் பாலுக்கு ரூபா 80 - 100க்கு இடைப்பட்ட விலை வழங்கப்படுகிறது. இதனை 120 ரூபாவாக அதிகரிக்குமாறும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு லீற்றர் பாலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை! Reviewed by Author on October 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.