மன்னாரில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குற்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்.
இதன் போது முதல் நாளான இன்று (4) திங்கட்கிழமை விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது பலர் பெற்றோருடன் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்தவர்கள் வைத்தியர்களின் விசேட ஆலோசனையை பெற்று பின்னர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
12 வயது தொடக்கம் 19 வயதிற்கு உட்பட்ட விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று உள்ளவர்களுக்கு நாளை செவ்வாய் (5) மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமை (6) ஆகிய இரு தினங்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குற்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்.
Reviewed by Author
on
October 04, 2021
Rating:

No comments:
Post a Comment