அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஈச்சளவாக்கை குளத்தில் 2 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) மற்றும் மீன்பிடி அமைச்சும் இணைந்து மன்னார் ஈச்சளவாக்கை குளத்தில் மீன் பிடி நடவடிக்கைகளுக்கு என 2 லட்சம் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு இன்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. கொரோனா தொற்று காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதேவேளை நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் மேற்படி செயற்திட்டன் மெசிடோ நிறுவனத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது 

இவற்றிற்கான இறால் குஞ்சுகளை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடொ, மீன்பிடி அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மன்னர் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மற்றும் ஈச்சளவாக்கை நன்னீர் மீன்பிடி சங்கத்தின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். அதே நேரம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட குளங்களில் இறால் குஞ்சுகள் விடுவதற்கான ஏற்பாடுகள் மெசிடோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
                 









மன்னார் ஈச்சளவாக்கை குளத்தில் 2 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது Reviewed by Author on October 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.