அண்மைய செய்திகள்

recent
-

மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

களுவாஞ்சிக்குடி மகிளூர் பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிளூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி மகிளூர் பல நோக்கு கூட்டுறவு சங்க வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய ராஜேந்திரன் ரஜேந்தினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

 குறித்த நபர் திருமணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்று கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வீடுதிரும்பியுள்ள நிலையில் அவர் அங்கிருந்து அனுப்பிய பணம் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு இரவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் 38 வயதுடைய கணவனை கைது செய்துள்ளதுடன் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பாக தடயவியல்; பிரிவு பொலிசார் அழைக்கப்பட்டு விரிவான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது! Reviewed by Author on October 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.