அண்மைய செய்திகள்

recent
-

உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்

இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றன. குறித்த இறுதி கிரியைகளில் அப்பகுதி மக்கள் பங்கேற்று, சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதன்போது அப்பகுதியிலுள்ள வீடுகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. 

தோட்ட மக்கள் எவரும் நேற்றைய தினம் தொழிலுக்கு செல்லவில்லை. இராகலையில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் உடல் கருகி உயிரிழந்தோரின் சடலங்கள் தொடர்பில், நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், உடற் கூற்று மாதிரிகளை இராசாயண பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவேண்டும் என நேற்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனையின்போது, உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட முடியாததால் இந்த திறந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் சடலங்கள் நல்லடக்கம் Reviewed by Author on October 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.