அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார். இவர் எதிர்வரும் புதன்கிழமை யின் பின்னர் ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் என்று தெரிய வருகின்றது. ஜீவன் தியாகராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப் பட்டிருந்தார். இதற்கு முன்னதாக 1984ஆம் ஆண்டு முதல் அரச சார்பற்ற அமைப்புகளில் பணியாற்றினார்.

 மனித உரிமைகள் செயல்பாட்டாளரான இவர், மனிதாபிமான நிறுவனங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை யும் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, புதிய ஆளுநர் நியமனம் தொடர்பில் தனக்கு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று தற்போதைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.


வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா Reviewed by Author on October 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.