அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போன பொலிஸ் சார்ஜன் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி கம்பளை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காணாமல் போன, கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றி வந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் வைத்திய சாலையின் நீர் தாங்கிக்குள் இருந்து நேற்று மீட்கப் பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர் வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியிலிருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்நிலையில், கம்பளை ஆதார வைத்தியசாலையின் வாட்டுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் துர்நாற் றம் வீசுவதாக வைத்தியசாலை விடுதி களிலிருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தண்ணீர் தாங்கியைப் பரிசோதித்த போதே அதில் சடலம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த எஸ். இளங்கோவன் என்ற பொலிஸ் சார்ஜன்டே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை கம்பளை நீதவான் மேற்கொண்டார். உயிரிழந்தவரின் சடலத்தை அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பொலிஸ் சார்ஜன் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்பு Reviewed by Author on October 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.