பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் பிணையில் விடுதலை
இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு நேற்று முன்தினம் மும்பை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், அவர் உடனடியாக விடுதலை செய்யப் படவில்லை.
இதனையடுத்து ஏறத்தாழ 27 நாட்களுக்குப் பின்னர் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், வெளி நாடு செல்வதெனில் நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்றும், விசாரணைக்கு அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பிணை நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது.
பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் பிணையில் விடுதலை
Reviewed by Author
on
October 30, 2021
Rating:

No comments:
Post a Comment