அண்மைய செய்திகள்

recent
-

உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலையில் விவசாயிகள் போராட்டம்

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இவ்வாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர். அகில இலங்கை விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், உரத் தட்டுப்பாட்டால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உள்ளக்குமுறல்களாக வெளிப்படுத்தினர். 

 விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் வழங்கப்படாததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், அரசாங்கம் இந்த விடயத்தில் தனது பிடிவாத போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், உரத்துக்காக தேங்காய் உடைத்து இறைவனையும் வழிப்பட்டனர்.

உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலையில் விவசாயிகள் போராட்டம் Reviewed by Author on October 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.