அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர் சம்பள விவகாரம் நாளை தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கின்றார் பிரதமர்

சம்பள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக நாளை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். நாளை பிரதமருக்கும் ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்களிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் இதனை உறுதி செய்துள்ளார். 

தங்கள் பிரதிநிதியொருவரை இந்த சந்திப்பிற்கு அனுப்புமாறு தொழிற்சங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாளைய பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாடசாலைகள் மீள ஆரம்பமானதும் ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என உறுதியாக நம்புவதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சம்பள விவகாரம் நாளை தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கின்றார் பிரதமர் Reviewed by Author on October 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.