மன்னார் பெரிய கட்டு புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் 1000 மர நடுகை நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை (13) காலை 10 மணியளவில் பெரிய கட்டு புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில், பங்குத்தந்தை அருட்பணி அருள்ராஜ் அடிகளாரின் நெறிப்படுத்தலில், சுமார் 1000 மரக்கன்றுகள் நாட்டும் மாபெரும் மரநடுகை நிகழ்வு நடை பெற்றுள்ளது.
இதில் மாவட்ட வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி கெகுலேன்ற , சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலைமை காரியாலயத்தினை சேர்ந்த அதிகாரி இசான் , மன்னார் மாவட்டச் செயலக சுற்றுச்சூழல் அதிகார சபையின் உத்தியோகத்தர் திருமதி யக்கோ பிள்ளை ஆகியோர் கொண்டனர்.
அத்தோடு கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் உப காரியாலய உதவி இயக்குனர் அருட்பணி அருண் தாஸ் குரூஸ், கன்னாட்டி பங்குத்தந்தை அருட்பணி அன்ரனி சோசை அடிகளார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் பணிகளோடு இணைந்து செயலாற்றும் அருட்சகோதரி சகாயராணி,வாழ்வுதய பணியாளர்கள் ஆகியோர் பெரிய கட்டு பங்கு பணிமனையோடு இணைந்து பணியாற்றும், பங்கு மக்களும் குறித்த மர நடுகை நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் மரங்களை நடுகை செய்தமையும் குறிப்பிடத்தக்கது
மன்னார் பெரிய கட்டு புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் 1000 மர நடுகை நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
November 13, 2021
Rating:

No comments:
Post a Comment