நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு – DMC
இதனிடையே, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கண்டி, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய மற்றும் வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் ருவன்வெல்ல, மாவனெல்ல, கலிகமுவ, தெஹியோவிட்ட, கேகாலை, தெரணியல, யட்டியாந்தோட்டை, அரநாயக்க மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு – DMC
Reviewed by Author
on
November 17, 2021
Rating:
No comments:
Post a Comment