அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் மக்களின் பண்பாட்டுக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் மக்களின் பயண்பாட்டுக் காணிகள் மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பது என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(16) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது. -இதன் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காணிகள் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின்; கீழ் காணப்படுவதோடு, மக்களின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பலவும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமை தொடர்பாக வடக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர். 

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். -மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி..ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(16) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்,காதர் மஸ்தான்,கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், இராணுவம்,பொலிஸ் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள காணி தொடர்பாக பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

 இதன் போது பிரதேச செயலாளர்கள் தமது பிரிவில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின்; கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் குறிப்பாக மக்களின் பயன்பாட்டில் உள்ள பல ஏக்கர் விவசாய காணிகள் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின்; கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

 இந்த நிலையில் பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன் வைக்கின்ற பல பிரச்சினைகள் உடனே தீர்க்க முடியாத காரணத்தினால் விசேட குழு ஒன்றை நியமித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பது என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.










மன்னாரில் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் மக்களின் பண்பாட்டுக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை Reviewed by Author on December 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.