அண்மைய செய்திகள்

recent
-

சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு - கல்வி அமைச்சு அறிவிப்பு!

பாடசாலைகளில் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று (10) முதல் வழமை போன்று ஆரம்பமாகின்றன. எவ்வாறாயினும், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாணவர்கள் தங்களது உணவுகளை வீடுகளிலிருந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இன்று (10) முதல் பாடசாலைகள் வழமைக்குத் திரும்புவதால் பெற்றோர்கள், மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு - கல்வி அமைச்சு அறிவிப்பு! Reviewed by Author on January 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.