அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு தங்குமிடங்களையும் உணவையும் வழங்க முன்வரும் இலங்கையர்கள்

இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்களிற்கு பெருமளவு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள மக்கள் அவர்களிற்கு இலவச தங்குமிடங்களையும் உணவுகளையும் வழங்கிவருகின்றனர். இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்களின் விசாவை நீடிப்பதா என்பது குறித்து இன்று அமைச்சரவை தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டுமா என்பது குறித்தும் அசை;சரவை தீhமானிக்கும் என தெரிவித்துள்ளார். ரஷ்யா ஆரம்பித்துள்ள இராணுவநடவடிக்கை காரணமாக இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்கள் மோதல் முடிவிற்கு வந்து விமானசேவைகள் மீண்டும் ஆரம்பிக்கும்வரை தாங்கள் தங்கியிருப்பதற்கு இலவசமாக இடங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஹோட்டல்களும் தனிநபர்களும் தற்போது இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு இலவச தங்குமிடங்களையும் உணவினையும் வழங்க முன்வந்துள்ளனர் - இதற்கான அறிவிப்பை முகநூலில் காணமுடிகின்றது. களுத்துறையில் ஐந்து படுக்கையறைகளை கொண்டமாளிகையொன்றின் உரிமையாளர் இலவசதங்குமிடங்களையும் உணவையும் வழங்க முன்வந்துள்ளார். அம்பேவலவில் உள்ள பண்ணையொன்று இலங்கையி;ல சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு தங்குமிடங்களை வழங்க முன்வந்துள்ளது.

 இதேபோன்ற அறிவித்தல் அறுகம்குடாவிலிருந்தும் வெளியாகியுள்ளது. இலங்கையை சேர்ந்த பல தனிநபர்கள் முகப்புத்தகங்களி;ல் இலவச தங்குமிடங்கள் உணவுகளிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதேவேளை இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு இலவச தங்குமிடங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் தனிநபர்கள் தாங்கள் விரும்பினால்அவ்வாறான உதவிகளை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு தங்குமிடங்களையும் உணவையும் வழங்க முன்வரும் இலங்கையர்கள் Reviewed by Author on February 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.