அண்மைய செய்திகள்

recent
-

பல பகுதிகளில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

 நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வடக்கு முதல் வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் படிப்படியாக தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதனால் நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100  மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடற்றொழிலில் ஈடுபடுவோர் நாளை முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கண்டி மற்றும் நுவரெலியா மாட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஹப்புத்தளை நகருக்கருகில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்  செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





பல பகுதிகளில் 150 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு Reviewed by Vijithan on November 26, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.