அண்மைய செய்திகள்

recent
-

"ரஷ்ய ஆயுதப் படையில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்" - பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர்

உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 24 மணி நேரத்தில் ரஷ்யா தனது முக்கிய குறிக்கோள்கள் எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

 இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் முழுவதையும் ஆக்கிரமிக்க விரும்புகிறார் என்பது பிரித்தானிய அரசாங்கத்தின் கருத்து. ஆனால்,அண்டை நாடுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ‘நம்பிக்கையான கால அட்டவணைக்கு பின்னால் உள்ளது. எங்கள் மதிப்பீடு, இன்று காலை நிலவரப்படி, ரஷ்யா அதன் முக்கிய குறிக்கோள்கள் எதையும் எடுக்கவில்லை. உண்மையில் இது அதன் நம்பிக்கைக்குரிய கால அட்டவணைக்கு பின்னால் உள்ளது.

"ரஷ்ய ஆயுதப் படையில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்" - பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் Reviewed by Author on February 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.