எழுத்துமூல உறுதிமொழி தரும்வரை போராட்டத்தை நிறுத்தோம்!
பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் ஊடக சந்திப்பொன்றை நேற்று நடத்தினர். அதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பினால் நமது கடல் வளம் அழிக்கப்படுவதுடன் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது உயிர்களைப் பறிக்குமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.
எனவேதான் இந்த அராஜகத்துக்கு நிரந்தர முடிவு காணும் வகையில், பொன்னாலை தொடக்கம் பருத்தித்துறை வரை சாலை மறியல் போராட்டத்தையும் ,கடற்றொழில் மறிப்பு போராட்டத்தையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயமே ஒன்றிணைந்து இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.எமது போராட்டத்துக்கும், சமாசம் மற்றும், மாவட்ட சம்மேளனத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை.
எழுத்துமூல உறுதிமொழி தரும்வரை போராட்டத்தை நிறுத்தோம்!
Reviewed by Author
on
February 03, 2022
Rating:
No comments:
Post a Comment