“வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பணிகள்” செயற்திட்டம் மன்னார் வேட்டையார் முறிப்பு கிராமத்திலும் ஆரம்பித்து வைப்பு
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான மாதர் சங்கத்திற்கான அரைக்கும் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கு 3 மில்லியன் ரூபாய் நிதியானது இவ்வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இதனால் கிராமத்தில் தன்னிறைவான அபிவிருத்தி ஒன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமெல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதது.
“வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பணிகள்” செயற்திட்டம் மன்னார் வேட்டையார் முறிப்பு கிராமத்திலும் ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
February 03, 2022
Rating:
Reviewed by Author
on
February 03, 2022
Rating:

No comments:
Post a Comment