மகனின் தாக்குதலால் தந்தை பலி; இராகலையில் சம்பவம்
தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்தப்போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் விசாரணைக்குப் பின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரி ஊடாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள இராகலைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராகலை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகனின் தாக்குதலால் தந்தை பலி; இராகலையில் சம்பவம்
Reviewed by Author
on
February 05, 2022
Rating:
No comments:
Post a Comment