ஐபிஎல் மெகா ஏலம்..!! சிஎஸ்கே விற்கு தமிழ் இயக்கங்கள் எதிர்ப்பு..!! தோனிக்கு போர்கொடி.. காரணம் என்ன?
மிரட்டல்
தீக்சனாவை அணியிலிருந்து நீக்கவில்லை என்றால் சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் தமிழகத்தில் போட்டியை நடத்த விட மாட்டோம் என்ற தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அமைப்புகளின் இந்த எச்சரிக்கையால் சிஎஸ்கே அணி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை வீரர்களை தேர்வு செய்யாமல் இருந்தது.
வரலாறு
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தும் போது இலங்கையை சேர்ந்த யாரும் ஆட்டத்தில் இருக்க கூடாது என்றும், அப்படி இருந்தால் பாதுகாப்பு தர முடியாது என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால் பல ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே மீண்டும் ஒரு இலங்கை வீரரை எடுத்துள்ளதால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம்..!! சிஎஸ்கே விற்கு தமிழ் இயக்கங்கள் எதிர்ப்பு..!! தோனிக்கு போர்கொடி.. காரணம் என்ன?
Reviewed by Author
on
February 15, 2022
Rating:

No comments:
Post a Comment