கோவளம் கடற்பரப்பில் 6 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று (19) அதிகாலை காரைநகர், கோவளம் வெளிச்சவீட்டுக்கு வட மேல் திசையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையினர், குறித்த படகை கைப்பற்றியுள்ளதோடு, அதில் இருந்த 6 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகையும் மயிலிட்டி மீன் பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவளம் கடற்பரப்பில் 6 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது
Reviewed by Author
on
February 19, 2022
Rating:

No comments:
Post a Comment