உறுதியான தீர்வு கிடைக்கும் வரை முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்-வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்
கடந்த வாரம் ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது விரைவில் முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்திற்கான தீர்வை கலந்துரையாடல் மூலமாக பெற்றுத்தருவதாக ஆளுனர் வாக்குறுதி வழங்கிய நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களால் அன்றைய தினம் இடம் பெற்ற ஆர்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது
இருந்த போதிலும் இறுதியான, திருப்தியான பதில் கிடைக்கும் வரை முன்பள்ளிகளுக்கு தாங்கள் சமூகம் அளிக்க போவதில்லை எனவும் தங்கள் போராட்டங்கள் அமைதியான முறையில் தொடர்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
உறுதியான தீர்வு கிடைக்கும் வரை முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்-வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்
Reviewed by Author
on
February 23, 2022
Rating:
No comments:
Post a Comment