அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு விவசாயிகளின் புத்தரிசி வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து காலபோக நெற்செய்கையின் போது அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தும் முகமாக வருடாந்த புத்தரிசி விழா ஏப்ரல் 3 ஆம் திகதி அனுராதபுரம் அக்ர சாஸ்ய ஜெயஸ்ரீ மகா போதியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்காக மாவட்ட ரீதியாக புத்தரிசி வழங்குவதற்கான விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

 அந்த வகையில் முல்லைத்தீவு​ மாவட்ட புத்தரிசி சேகரிக்கும்​ விழா நேற்று 22.03.2022​ ஒட்டுசுட்டான்​ கமநல சேவைகள் நிலையத்தில் கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரின் பங்கு பெற்றலுடன் சிறப்புற இடம்பெற்றது தனாம் செய்வதில் சிறந்த விவசாயிகளாக முல்லைத்தீவ மாவட்ட விவசாயிகள் காணப்படுகின்றார்கள் பசளைப்பிரச்சினை,யானை அழிவு,போன்ற பல்வேறு அழிவுகளுக்கு மத்தியில் அறுவடையினை செய்த விவசாயிகள் நெல்லினை அரிசியாக்கி ஒரு பகுதியினை புத்தபெருமானுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார்கள். 

 முல்லைத்தீவு மாவட்ட கமலநஅபிவிருத்தி உதவி ஆணையாளர் பரணீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி அவர்கள்,மாவட்ட விவசாய பணிப்பாளர் கோகுலதாசன் உள்ளிட்ட பெரும்பாக உத்தியோகத்தர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,பண்ணை முகாமையாளர்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் புத்தரிசி காணிக்கையினை வழங்கியுள்ளார்கள்.

சண்முகம் தவசீலன்











முல்லைத்தீவு விவசாயிகளின் புத்தரிசி வழங்கும் நிகழ்வு! Reviewed by Author on March 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.