காப்புறுதிப் பிரச்சினை : ரஷ்யாவுக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்
ரஷ்யாவுக்கு பறக்கும் ஸ்ரீலங்கன் விமானக் காப்புறுதியை இரத்து செய்ய ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்களுக்கு காப்புறுதி செய்துள்ள பிரித்தானிய விமான நிறுவனம் எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம்.
இது இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவல்ல எனவும், ஸ்ரீலங்கன் விமான சேவை தனது கட்டுப்பாட்டை மீறிய சம்பவத்தினால் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடந்த வருடம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கும் ரஷ்யா வுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது. அதன்படி வாரத்துக்கு இரண்டு விமானங்கள் கொழும்புக்கும் மொஸ்கோவுக்கும் இடையில் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காப்புறுதிப் பிரச்சினை : ரஷ்யாவுக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்
Reviewed by Author
on
March 30, 2022
Rating:
No comments:
Post a Comment