எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரை கைது செய்த இந்தியக் கடலோரக் காவல்படை-
படகையும், இலங்கை மீனவரையும் அழைத்து வர நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2. 20 மணிக்கு கோடிக்கரை படகு துறைமுகத்திலிருந்து பைபர் படகு கடலோர பாதுகாப்புப் படை கப்பலை நோக்கி புறப்பட்டது.
மீனவரையும் மீன்பிடி படகையும் வேதாரணிய காவல்துறை ஆய்வாளரிடம் இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் ஒப்படைத்தனர்.
இருப்பினும் இலங்கை மீனவரின் படகில் கடல் நீர் நிறைந்து படகின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்ததால் படகை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன் பிறகு மற்றொரு படகு கோடிக்கரை துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை மீனவரின் படகை இழுத்துக்கொண்டு வேதாரணியம் அடுத்த ஆறுகாட்டுத்துறை படகு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இலங்கை மீனவர் மட்டும் கோடிக்கரை படகு துறைமுகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு 8 மணி அளவில் அழைத்து வரப்பட்டார்.
அழைத்து வரப்பட்ட இலங்கை மீனவரை சுங்கதுறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி, கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் குமார், கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரை கைது செய்த இந்தியக் கடலோரக் காவல்படை-
Reviewed by Author
on
March 30, 2022
Rating:

No comments:
Post a Comment