அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை!

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ ‘(அணு உலையின்) கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால்’ இது ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி டூஸ், ரஷ்ய படைகள், ‘கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,’ என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார். 

 மேலும், ‘ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது’ என்று கூறினார். அணுமின் நிலையம் ரஷ்ய படைகளின் நேரடி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், பற்றி எரியும் நெருப்பை அணைக்கை தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை என்றும் டூஸ் கூறினார். மேலும், தீப் பிடித்து எரியும் அணு உலை தற்போது செயற்பாட்டில் இல்லை, அது புதுப்பிக்கப்படுகிறது இருப்பினும், அங்கு அணு உலைக்கான எரிபொருள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டின் மொத்த மின் தேவையில் 25 சதவீதத்தை ஸபோரிஷியா அணு மின் நிலையம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை! Reviewed by Author on March 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.