மன்னார் திருக்கேதீச்சர சிவராத்திரி திருவிழா- இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் பக்தி பூர்வமாக நடை பெற்று வருகிறது.
ராணுவம் ,போலீஸ், சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள்.
மன்னார் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்துதலிலும் மன்னார் மாவட்ட செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரின் மேற்பார்வையில் வெளி நிர்வாக ஒழுங்குகள் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.
பக்திபூர்வமாக பூஜைகள் நடைபெற்று வருவதுடன் பக்தர்களும் மிக அமைதியாக தீர்த்தம் எடுத்து வந்து மூல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே திருக்கேதீஸ்வரத்தில் வலுவூட்டல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்களின் வருகை குறைவாக காணப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீச்சர சிவராத்திரி திருவிழா- இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் பக்தி பூர்வமாக நடை பெற்று வருகிறது.
Reviewed by Author
on
March 01, 2022
Rating:
Reviewed by Author
on
March 01, 2022
Rating:

No comments:
Post a Comment