அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உரம் வழங்கும் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட மன்னாகண்டல் மூன்றாம் கண்டம் பகுதிகளில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான சேதன உரம் வழங்கும் நிகழ்வு விவசாயிகளின் நன்மை கருதி மன்னாகண்டல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது அந்த வகையிலே ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் செய்கை பண்ணப்பட்ட135 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் மூன்றாம் கண்டம் பகுதியில் செய்கை பண்ணப்பட்ட 120 ஏக்கர் நிலங்களுக்குமான பசளை விநியோகம் விவசாயிகளின் சிரமங்களை குறைக்கும் முகமாக மன்னாகண்டல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது 

 விவசாயிகளின் சிரமங்களைப் போக்கும் முகமாக உரங்கள் கமநல சேவை நிலையத்திற்கு ஏற்றி வருகை தந்த கனரக வாகனங்களை மன்னாகண்டல் எடுத்துச் சென்று மன்னாகண்டல் பகுதியில் வைத்து பயனர்களுக்கான ஏக்கருக்கு 400 கிலோ வீதம் விநியோகம் இடம்பெற்றது ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சுகந்தன் தலைமையில் கமநல சேவை நிலைய ஊழியர்கள் குறித்த பகுதிக்கு சென்று அங்கு விவசாயிகளுக்கான பசளை விநியோகத்தில் ஈடுபட்டனர் தமது போக்குவரத்து செலவுகளை குறைத்து தமக்கான பசளைகளை அருகில் கொண்டுவந்து தமது சிரமங்களை குறைக்கும் முகமாக செயற்பட்ட ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊழியர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்











முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உரம் வழங்கும் நிகழ்வு Reviewed by Author on March 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.