அண்மைய செய்திகள்

recent
-

யாழ். சுழிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு;

யாழ். சுழிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் வீதியோரமாக சடலமாக காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் சுழிபுரம், கொட்டி தேரன் சிவன் ஆலயத்தின் பின்பக்க வீதியோரமாக ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வீழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. 

இவ்வாறு சடலமாக காணப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தவர் என தெரியவருகிறது. முகம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதுடன் சடலம் மற்றும் மோட்டார் சைக்கிள் வீசப்பட்டிருக்கும் நிலைகளை அவதானிக்கும் போது குறித்த நபர் கொலை செய்யப்பட்டு அவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். சுழிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு; Reviewed by Author on March 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.