அண்மைய செய்திகள்

recent
-

மகா சிவராத்திரி விரதம்

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்(01). வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நாளின் சிறப்பு குறித்து கந்தபுராணம் மற்றும் அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிப்பட்டுள்ளது. 

 சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி பெற்று முத்தியை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.


மகா சிவராத்திரி விரதம் Reviewed by Author on March 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.