தூர பயணத்திற்கான தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டது
டீசல் பிரச்சினைக்கு மத்தியில் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டமையினால் பயணிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகளவிலான வேன்கள் சேவையில் ஈடுபடவில்லை.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
திட்டமிட்டவாறு இன்றைய தினம் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டது.
எனினும், டீசல் தட்டுப்பாடு காரணமாக 30 வீதமான கொள்கலன் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தூர பயணத்திற்கான தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டது
Reviewed by Author
on
April 01, 2022
Rating:

No comments:
Post a Comment