சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறல் – மனித உரிமைகள் ஆணைக்குழு
சமூக ஊடங்கள் மீதான தடையை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவரேனும் ஒருவர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தினால் அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்து ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் முடக்குவது மனித உரிமை மீறலாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலுக்கமைய, சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறல் – மனித உரிமைகள் ஆணைக்குழு
Reviewed by Author
on
April 03, 2022
Rating:

No comments:
Post a Comment